Friday, January 28, 2011

அந்த நாள்

....., 1993

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதி!"

"ராஜ்! உன்னோட செந்தமிழ்த் தேன் வாழ்த்துக்கள் சூபர்ப். சாருமதிங்கற பேர நீ மட்டும் 'மதி'ன்னு கூப்பிடறப்போ ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. நன்றி ராஜ்! அது சரி வாழ்த்துக்கள் மட்டும்தானா?"

"மதி! இது உனக்குதான் ஸ்பெஷலா ஆர்டர் பண் வாங்கினது"

"வாவ்! எனக்கு பிடிச்ச யெல்லோ ரோஸ் பொக்கே! ராஜ்! ஐயம் த்ரில்ட்! க்ரேட்!"

"கைக்குக் கிடைச்ச பாக்கியம் என் உதட்டுக்கு இல்லயே மதி!"

"ச்ž...நாட்டி...கம்னாட்டி..இப்பவே லிப் டு லிப் கேக்குதோ?! அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமாத்தான்!"

"அது சரி...இப்பதான் நான் தேர்ட் இயர் எஞ்ஜினியரிங். இன்னும் ஒரு வருஷம்...அப்புறமா வேல தேடும் படலம்..நம்ம கல்யாணத்துக்கு இன்னும் அட்லீஸ்ட் 3/4 வருஷம் இருக்கு மதி...அதனால..."

"அதனால..."

"மதி! நீ கிரிக்கெட் மாட்ச் பாத்திருக்கியா?"

"யெஸ்"

"மாட்சுக்கு முன்னாடி என்ன செய்வாங்க?"

"என்ன செய்வாங்க?!"

"நெட் ப்ராக்டிஸ்! அது மாதிரி...பலான மேட்டர் எவ்ளோ பெரிய விஷயம்? தெரிஞ்சுக்க வேணாமா?!"

"அடப்போய்யா! நீயும் உன் குப்பை புத்தியும்..."

"மதி! ஒண்ணே ஒண்ணு மா! என் கண்ணு இல்ல...என் செல்லம் இல்ல..."

"இதுக்குதான் யாருமே இல்லாத இடத்துக்கு தள்ளிகினு வந்தியா?! கம்னு குந்திகினு கிட!"

"என்ன மதி! திடீர்னு மெட் ராஸ் பாஷை?"

"இப்ப ஓகேன்னு சொன்னா அப்பால எல்லாமே ராங்கா பூடும்...தள்ளி குந்து நைனா!"

"போன பர்த்டே போது கொடுத்தது மா...அப்பப்ப தரத் தாவல...கொடுக்கலன்னா மறந்துபோயிடும்..கொடுத்துடு..."

"சே ராக்ஷஸ ராஜ்! உதடு எப்படி செவந்துடுத்து பாரு! என்ன முரட்டுத்தனம்?!"

"இன்னும் ஒரு தடவை ஒத்தடம் கொடுத்தா சரியாயிடும் மதி!"

"கிட்ட வந்தா ஒதைப்பேன் ராஸ்கல்!"

....., 1996

"மதி! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!"

"..... "

"ஏன் என்னோட பரிசை வேண்டாம்னு திருப்பி விட்டே?"

"....."

"என்ன மதி! பேச்சையே காணும்?"

"ராஜ்! என்னோட நெலம தெரிஞ்சும் ஏன் போன் பண்றே?"

"மதி! எனக்கு வாழ்த்து சொல்றதுக்குக் கூட உரிமையில்லயா?"

"ராஜ்! உன்னோட குரலக் கேக்கறப்ப என் மனசாட்சி என்னக் கொல்லுதுப்பா. இவ்ளோ நல்ல மனுஷனை ஏமாத்திட்டோமேன்னு துடிக்குதுடா. ப்ளீஸ்! என்ன புரிஞ்சிக்க...சித்ரவதை பண்ணாதடா!"

"தப்பு உம்மேல இல்ல...உன் சூழ்லைல நான் இருந்தாக்கூட அப்படித்தான் செஞ்சிருப்பேன். அதுக்காகப் போன் பண்றதுக்கூட 144 போடாத. நான் பண்ணத்தான் பண்ணுவேன். ஏன்னா அடுத்த வருஷம் இதே நாள்ல நீ திருமதி ஜகன்! அப்ப பண்ணமுடியாதே!"

"ப்ளீஸ்! கல்யாணம் நிச்சயமான இந்த சமயத்துல் நீ போன் பண்றது அவ்வளவா நல்லால்லை ராஜ்! என்ன புரிஞ்சுக்க..இதுவே நம்ம கடைசி பேச்சா இருக்கட்டும்...உன்ன கல்யாணத்துக்குக்கு கூப்பிடற தகுதியைக்கூட நான் இழந்துட்டேன்.."

"மதி!"

"......"


"ஹலோ?"

"......"

"ஹலோ!"

"...."

"எவ்வளவு தடவ நீ போனை கட் பண்ணாலும் நான் பண்ணிகிட்டே இருப்பேன் மதி!"

"ராஜ்! ப்ளீஸ்..."

"சத்தியமா இதுதான் நான் உன்னோட பேசற கடைசி வார்த்தை..திருமண வாழ்த்துக்கள்!"

....., 2002 காலை

"கிரி! சாயந்திரம் சினிமா போறோம். அப்டியே வெளில டின்னர். அப்புறமா.."

"ராஜ்! அது என்னப்பா எப்ப பாத்தாலும் 'கிரி'ன்னுட்டு...முழுப்பேரு கிரிஜா..கிரிங்கறது ஆம்பளப் பேருப்பா!"

"நீ மட்டும் என்னவாம்! போன வாரம் ஒரு நைட்டுல.."

"அய்யோ ராஜ்! வேணாமே.."

"இன்னிக்கு அதே மாதிரி..."

"நமக்குக் கல்யாணமாயி வருஷம் அஞ்சாவுது...பொறந்த ரெட்டையும் பொம்பள...இன்னும் சின்னப்புள்ள மாதிரி...என்ன இது போப்பா..."

"அட...வெக்கத்தப் பாரு!"

"அப்பா! குட்மார்னிங்!"

"குட்மார்னிங்க் சாரு! குட்மார்னிங்க் மதி!"

"அப்பா! சினிமா! அப்பா! பீச்!"

"அப்பா ஆபீஸ் போவேனா? அப்புறமா வருவேனா? 5 ஓ க்ளாக் எல்லாருமா சினிமா போறோமா? அப்புறம் சண்டே அன்னிக்கு பீச்சுக்கு போறோமா? ஓகே! இப்போ அப்பாவுக்கு ஒரு கிஸ்!"

"தாங்க் யூ டாட்!...ச்ச்"

....., 2002 இரவு

"மை காட்! இன்னிக்கு என்ன நாள் தெரியுமா ராஜ்?"

"தெரியும் கிரி!"

"தெரிஞ்சுமா...இன்னிக்கு இவ்ளோ ப்ரோக்ராம்?"

"ஆமா கிரி! என்னப்பத்தி முழுசும் தெரிஞ்சும் இந்த அஞ்சு வருஷம் இந்த நாளை ஒதுக்கி எனக்காக துக்கம் கொண்டாடிருக்க...குழந்தைகளுக்கும் சாரு, மதி ன்னு பேரு வைக்க மறுப்பு சொல்லல..ஆனா நான்..."

"ராஜ்! காதல்ல ஜெயிக்கறங்களுக்கு காதலோட அருமை புரியறதில்ல...ஆனா காதல்ல தோத்தவங்களுக்கு அதோட அருமை ச்சயமா தெரியும்...அதனாலதான்..."

"இல்ல கிரி...அத நான் மறந்துதான் ஆகணும்...எனக்குன்னு மனைவி, குழந்தைன்னு அமைஞ்சப்புறம் கூட நான் இன்னும் மறக்காம இருந்தா ரொம்ப தப்பு கிரி..."

"ராஜ்!"

"ஆமா கிரி! குடும்பங்கறது காதல விட உன்னதமானது...புனிதமானது...என்ன மன்னிச்சிரு!"

"ராஜ்! ஐ லவ் யூ!"

"நானும் உன்னை மனதார நேசிக்கிறேன் கிரி!"

1 comment:

இன்றைய கவிதை said...

என்னை பொறுத்த வரை காதல் ஒரு உன்னத உணர்வு அதை மறக்க தேவையில்லை ஆனால் புரிய வேண்டும் அது உன்னதம் என்று

நல்லா இருந்தது ரங்கா, (எங்கேயோ கேட்ட குரல் முன்னாடி படித்திருக்கிறேனோ?)

நன்றி ஜேகே