Friday, October 16, 2009

அப்பாவும் தீபாவளியும்

குமுதம் ஜங்ஷனில் 2003 தீபாவளி இதழில் வெளிவந்தது.படித்துப் பாருங்களேன்!
தீபாவளியை என் அப்பா கொண்டாடும் அழகே தனி. அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

என் அப்பாவின் தாத்தா திதி தீபாவளி அன்று வருவதால் அவர் சிறு வயதில் பண்டிகை கொண்டாடியதேயில்லை. ஊரெங்கும் மகிழ்ச்சியுடன் புத்தாடை உடுத்திருக்கையில் என் அப்பா மட்டும் பழைய உடை அணிந்திருப்பார். என் தாத்தா கொடுக்கும் காலணா வெங்காய வெடிகளில் அப்பாவின் தீபாவளி முடிந்துவிடும்! மதியம் திதி முடிந்தவுடன் கொண்டாடப்படும் தீபாவளியில் என்ன சுகம் இருந்திருக்க முடியும்?

எங்களுக்கு விவரம் தெரிந்த வயதில் தீபாவளியைக் கொண்டாடக் கற்றுக் கொடுத்தார். தனக்கு ஒரு எட்டு முழ வேட்டி, ஒரு புது 'கை வைத்த' உள் பனியன், ஒரு துண்டு என்பதோடு திருப்தி யடைந்த அவர், எங்களுக்கு துணிகள் வாங்கிக் கொடுப்பதில் குறையே வைக்கவில்லை. சமயத்தில் இரண்டு/மூன்று செட்கள் கிடைத்து விடும்.

சேனல்களில் அப்போதெல்லாம் வீடுகள் அடைபடாத காலம். தீபாவளியின் சந்தோஷமே பட்டாசுகள்தாம். அதை நன்றாக உணர்ந்திருந்தார் என் அப்பா. மத்திய சர்க்காரில் (ஏஜ“ஸ் அலுவலகம், தேனாம்பேட்டை) வேலை செய்பவர்களின் பல சலுகைகளில் ஒன்று சகாய விலையில் பட்டாசுகள்! அதற்கென்றே ஒரு தனிக்கூட்டம் என் அப்பா அலுவலகத்தில் கூடும்.

என் அப்பாவின் ரசனைகள் தனி. 5 'குருவி' வெடிகள் கொண்ட பாக்கெட் 25; 5 'லஷ்மி' வெடிகள் கொண்ட பாக்கெட் 5; 3 'redfort' சரங்கள்; 1 பாக்கெட் ஊசிப்பட்டாசு; 3 டஜன் கம்பி மத்தாப்புகள் (சாதாரணமான கம்பி மத்தாப்புகளில்தான் ஆர்வம்!); 1 டஜன் சாட்டை; 2 டஜன் தரைச்சக்கரம்; 3 டஜன் புஸ்வானம் என்று வகை வகையாக வாங்கினாலும் விலையென்னவோ ரூ 100க்குள்தான் இருக்கும்! racket, atom bomb, double வெடிகளில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. பொறுமையாக எங்கள் மூவருக்கும் பிரித்துக் கொடுப்பார் (நான், எனது தங்கை, தம்பி!). அப்பா வாங்கித்தந்த எந்த வெடிகளும் சோடை போனதில்லை.

தீபாவளிக்கு முதல் நாளில் வீட்டில் நிச்சயம் 'பஜ்ஜி' உண்டு! உருளை, கத்திரி, புடலை, வாழை என வகைகள் நீளும். அன்றைய இரவே மறுநாள் உடுத்த வேண்டிய துணிகளை எடுத்து பூஜையறை பலகை முன் வைத்து விடுவார். தலைக்குத் தேய்க்க வேண்டிய எண்ணெய் கூட காய்ச்சி வைக்கப்பட்டு விடும்! கேஸ் பர்னரில் தலையில் 'தவலை'கள் தண்ணீருடன் ஏற்றப்பட்டு விடும்!

காலை 3.30 மணிக்கு எழுப்பி விடுவார் (அது போகப்போகத் வளர்ந்து 4.30 ஆகி இன்று 5.30 ஆகிவிட்டது!). தலைக்கு எண்ணெய் வைக்கப்பட்டவுடன் எங்களில் ஒருவரோடு வீட்டிற்கு வெளியே வந்து ஒரு 'redfort' சரம் வைப்பார். 'பட பட' வென அது வெடிக்கும்போது அவர் முகம் விரிவதை நான் பார்த்திருக்கிறேன். 'எண்ணெய் வெச்சுண்டவுடனே ஒரு பட்டாசு வெக்கணும்; அதான் சாஸ்திரம்' என்பார்.

எல்லோரும் குளித்து முடித்தவுடன், தான் பலகையில் உட்கார்ந்து உடல் முழுதும் எண்ணெய் தேய்த்துக்கொள்வார். 'எண்ணெய் உடம்பு முழுக்க ஒரு எடம் விடாம தேச்சுக்கணும்; அப்பதான் ஒரு வியாதி வராது; அதே போல சீயக்கா மட்டும்தான் தேய்ச்சுக்கணும்; இன்னிக்கு சோப்பு கூடாது; எண்ணெய் முழுக்க போற மாதிரி சீயக்கா தேச்சுக்கபடாது; கொஞ்சம் பிசுபிசுப்பு இருக்கணும்' என்பார். குளித்தவுடன் எல்லோரையும் அன்பாக "கங்கா ஸ்நானம் ஆச்சா?" என்று விசாரிக்கும் அழகே தனி. அதே போல 'தீபாவளி மருந்து' சாப்பிட்ட பின் தான் எல்லா இனிப்பு/கார வகைகளில் கை வைக்க வேண்டும் என்ற அன்புக் க்ட்டளை வேறு!

"புஸ்வாணம், தரைச்சக்கரம், சாட்டை இதல்லாம் ராத்திரி விடணும்; அப்பத்தான் நன்னா இருக்கும். அதுவும் புஸ்வானம் பூத்து விரியற அழக ராத்திரிலதான் பாக்கணும்" என்று வற்புறுத்தி எங்களை ரசிக்க வைத்ததில் அவருடைய பங்கு அதிகம்.

தீபாவளி அன்று அவர் பாதம் தொட்டு ஆžர்வாதம் வாங்க வரும அனைவருக்கும் 'ஒரு ரூபாய்' நாணயம் உண்டு. அது வாங்குவதற்கென்றே எனது நண்பர்/உறவினர் கூட்டம் வருவதும் உண்டு!

இன்றும் தீபாவளி இருக்கிறது; அப்பாதான் இல்லை
!

Wednesday, October 07, 2009

நிஜம்

'பாஸ்கி! படம் பாத்த எல்லாரும் அலர்றாங்க. அவ்ளோ நல்லா இருக்காம். தியேட்டர்ல விசில் பறக்குது. நிச்சயம் வெள்ளி விழாதான். கலெக்ஷன் ரிபோர்ட் பாத்தியா?'

'டேய்! அந்த டாக்டர் ரோலை நான் பண்ணிருக்கணும்டா'

'பாஸ்கி! என்ன வெள்ளாடறியா? செத்துப் போற ரோலை நீ பண்ணா டிஸ்ட்ரிபியூடர்ஸ் வாங்குவாங்களா? இல்ல உன் ரசிகன்தான் சும்மா இருப்பானா? ஸ்க்ரீனை கிழிச்சு தியேட்டரையே கொளுத்திடுவாய்யா!'

'லை•ப் டைம் ரோல் அது; மிஸ்ஸாயிருச்சு!'

'நீ யாரு? எம்ஜியார் ரஜினிக்கப்பறமா நீதான்னு பேசிக்கறாங்க. ரெண்டு பேரோட ஸ்டைலையும் உட்டாலங்கடி பண்ணி, கொஞ்சமா கமலையும் விட்டுடாம கலாய்ச்சிகினு இருக்க. உனக்கு ஏண்டா இந்த வீண் ரிஸ்க்?'

'சும்மார்றா கம்மனாட்டி! திலக் படம் பாத்தியா?'

'ஹ¤ம்..பாத்தேன். ஸ்டார் பெர்•பார்மென்ஸ். ரெண்டு காலும் இல்லாம என்னமா நடிச்சுருக்கான்? ஆனா, உன்னோட படம் சுனாமி மாதிரி 'தள்ளி'கின்னு போயிருச்சு. தேவில அவன் படம் ஈயடிக்குது; பாரடைஸ்ல உன் படம் ப்ளாக்ல போவுது!'

'படத்துக்கு படம் திலக் என்னமா வெரைட்டி கொடுக்கறான்! நான்? ஒரே மாதிரி அம்மா சென்டிமென்ட், காமெடி, டூயட், வில்லன்?'

'பாஸ்கி! என்னாச்சு உனக்கு? ரொம்ப பிலஸா•பிகலா போயிட்ட. ஒண்ணை புரிஞ்சுக்கோ. நீ வந்துட்டு போனா போதும்னு உன் ரசிகன் நெனக்கறான். ஆனா திலக் படத்துல நூத்தம்பது பர்ஸென்ட் பெர்•பார்மென்ஸ் எதிர்பாக்கறான். அதுல கொஞ்சம் கொறஞ்சா கூட ஒப்துக்கறதில்ல'

'டேய்! எனக்குனு ஒரு மனசு இருக்குடா. அதுக்கு நான் தீனி போட வேணாமா?'

'உன்ன நம்பியிருக்கற இன்டஸ்ட்ரிய பாரு; உன் படம் போற வெலைய பாரு; அதனால வாழற குடும்பங்களப் பாரு; கவலையை மறந்து பாலூத்தி, உன்னப் பாத்தா விசிலடிக்கற •பேன்ஸை பாரு; இத்தனை வயசுக்கப்பறமும் உன் 'பல்செட்' சிரிப்புல மயங்கற சின்னப் பசங்கள பாரு; அதாண்டா உன்ன மாதிரி கமர்ஷியல் ஹீரோக்களுக்குத் தீனி. சுருக்கமா சொன்னா எங்கள் இதயத் திருடா! இதாண்டா சினிமா!'

Sunday, October 04, 2009

இரக்கம்

முன் குறிப்பு - 22 வருடங்களுக்கு முன் கையெழுத்து பிரதியான "பைரவி"யில் வெளிவந்த என் கதை அப்படியே தரப்பட்டிருக்கிறது. இந்த எழுத்தில் காணப்படும் "கன்னி"த் தன்மை என்னைக் கவர்கிறது. "காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு"தானே!

12ம் நம்பர் பஸ் ஐஸ் ஹவுஸ் டெர்மினஸ் வரும்போதே நல்ல கூட்டம். எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு ஏறினர், என்னைத் தவிர! எல்லோரும் ஏறிய பிறகு, நான் ஏறி இரண்டாம் படிக்கட்டில் நின்றேன். அப்போதுதான் அவ்வாலிபனை, நடத்துனர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருப்பவனைப் பார்த்தேன்.

ஒல்லியான தேகம். சுருள் முடி. வெளிர் நீல சட்டை. நீல பாண்ட். சட்டை பாக்கெட்டில் அழகாக செருகி வைக்கப்பட்ட பேனா. அருமையாக இருந்தான்.

அடுத்து வந்த ஐஸ் ஹவுஸ் போலிஸ் ஸ்டேஷனில் மற்றொரு கும்பல் ஏறிற்று. நான் இப்போது மூன்றாம் படிக்கட்டில் நின்றேன். பஸ் சிறிதே முனகிவிட்டு செல்ல ஆரம்பித்தது!

இரண்டொரு ஸ்டாப்பிங்குகள் கடந்தன. திரும்பிப் பார்க்கையில் அவ்வாலிபனுக்கு எதிரில் ஒரு கனமான அம்மாளும், கைக்குழந்தைக்காரியும் நின்றிருந்தார்கள். அவ்வாலிபனோ, ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து போயிருந்தான். அதைக் கலைத்தது அந்த கனமான அம்மாளின் குரல்!
"பச்ச புள்ளயோட அந்தம்மா நிக்கறது தெரியல? எழுந்து எடம் விடப்பா!" என்றாள் (கத்தினாள் என்பதே பொருந்தும்!) அவ்வாலிபன் அதிர்ந்து போய் எழுந்தே விட்டான்.

இதையெல்லாம் கவனித்து வந்த நான், "ஸார்! நீங்க உக்காருங்க. இந்த ஸ“ட்டுக்கு முன்னாலயும் லேடீஸ் ஸ“ட்தான். பின்னாலேயும் லேடீஸ் ஸ“ட்தான். அவங்க யாருக்குமே இல்லாத இரக்கம் உங்க கிட்ட மட்டும் இருக்கணுமா? நீங்க உக்காருங்க ஸார்! அப்படியே அந்தம்மா உக்காந்துதான் ஆகணும்னா லேடீஸ் ஸ“ட் லேந்து யாராவது எந்திரிச்சப்புறம் உக்காரட்டும்" என்றேன் அந்த கனமான அம்மாளின் பார்வையைப் பொருட்படுத்தாமல்!

உடனே அவ்வாலிபன் " பரவாயில்லப்பா, பொண்ணுன்னா பேயும் இரங்கும்னு பெரியவங்க சொல்வாங்க. நான் பேயை விடக் கொடியவனா இருக்க விரும்பல. புக் படிச்சிக்கிட்டு இருந்ததால நான் இவங்கள கவனிக்கல. அவங்க இப்ப உக்காரட்டும்" என்றான். நான் பதில் பேசவில்லை. அவன் எழுந்து கொஞ்சம் சிரமப்பட்டு தள்ளி நின்றுகொண்டான்.

Amruthanjan stopping வந்தது. அவ்வாலிபன் இப்போது மிகவும் சிரமப்பட்டு இறங்கினான்.

பஸ்ஸ”ம் கிளம்பியது. அவன் விந்தி விந்தி நடந்ததைக் கண்டு நான் அதிர்ந்தே போனேன்!

அந்த கனமான அம்மாள் முகத்தில் ஈயாடவில்லை!

Thursday, October 01, 2009

பிறந்த நாள்

விஷ்வா அன்று காலை விழித்துக் கொள்ளும் போது மணி ஏழாகிவிட்டது. மனைவி நிகிதாவை திட்டிக் கொண்டே அரக்கப் பரக்கக் குளித்தார். குளிக்கும் போது சட்டென ஞாபகம் வந்தது "அட! இன்றுதானே எனக்கு பிறந்த நாள்..நிகிதா ஆச்சரியப் பரிசு வைத்திருப்பாள்...அருணும், அகிலாவும் வழக்கம் போல் பூங்கொத்துடன்.." நினைப்பே இனித்தது. இன்றாவது அலுவலகத்திலிருந்து žக்கிரம் வந்து எல்லோரையும் "அன்னலஷ்மி"க்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அவருக்குப் பிடித்த நீல நிறத்தில் உடுத்திக் கொண்டு, டைனிங் ஹாலுக்கு வந்தபோது, காலை டிபன் ரெடியாக இருந்தது. "அட..நமக்குப் பிடித்த வெண் பொங்கல், வெங்காய கொத்ஸ”, காரட் அல்வா.." நிகிதாவை மனதில் பாராட்டினார். "என்னங்க..போட்டுக்க வேண்டியது தானே.." என்று கூறியவாறே நிகிதா பரிமாற ஆரம்பித்தாள். வழக்கம் போல் பிறந்த நாள் பரிசான "நெற்றி முத்தம்" மிஸ்ஸ’ங். அதிர்ச்சியாக இருந்தது. நிகிதாவின் முகத்தைப் பார்த்தார். கோபம் எதுவும் இல்லை.

"ஹாய் டாட்!" என்றார்கள் அருணும், அகிலும். நினைவிற்கு வந்தார். "மா..! காலேஜுக்கு லேட் ஆயிடுத்து..žக்கிரம்.." என்றவாறே தட்டில் தாளம் போட்டனர். "டாட்! கேன் யூ ட் ராப் மீ..?" என்று அகில் கெஞ்சினாள். இவர்களுக்குமா ஞாபகம் இல்லை? மற்றொரு சராசரி தினம் போல் அல்லவா நடந்து கொள்கிறார்கள்?

விஷ்வாவிற்கு காரட் அல்வா கசந்தது. சாப்பிட்டு முடித்து "நிகி! நா(ன்) கௌம்பறேன்" என்றார். "சரி..வழக்கம் போல லேட்தானே?" என்றாள் நிகிதா. "ஆமாம்" என்று உதிர்த்து விட்டு மாருதியை உசுப்பினார்.

வழியில் செல்லும் போது வருத்தமாக உணர்ந்தார். மனசு கனமாக இருந்தது. அலுவலகத்துள் நுழைந்து, லிப்டில் ஏறி, 6வது மாடியில் இருந்த தன் கேபினுக்குள் புகும் போது, அவரது செகரட் ரி ஜோத்ஸ்னா "குட் மார்னிங் பாஸ்! ஹாப்பி பர்த்டே" என்றாள். விஷ்வா தெம்பானார். அட்லீஸ்ட இவளாவது ஞாபகம் வைத்திருக்கிறாளே...!

விஷ்வா அன்றைய அலுவல்களில் ஆழ்ந்ததில் மணி ஒன்றானது தெரியவில்லை. கதவை மெலிதாகத் தட்டிய பின் வந்த ஜோத்ஸ்னா "நீங்கதான் இன்னிக்கு எனக்கு ட் ரீட் கொடுக்கணும்..எங்க போலாம்?" என்றாள். விஷ்வாவிற்கும் சரியெனப் பட்டது. "வா..! "அன்னலஷ்மி" போலாம்" என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றார்.

ஏதேதோ பேசியதில் விஷ்வாவிற்கு நேரம் சென்றதே தெரியவில்லை. அசட்டுத்தனமாய் ஜோத்ஸ்னா மேல் சபலம் தட்டியது. புருஷனை இழந்தவள். இன்றும் அவள் பழகும் முறையில் ஒரு வினோதம் தென்படும். அதுவும் எல்லோரும் அலட்சியப் படுத்திய தன் பிறந்த நாளை அவள் கொண்டாடிய விதம் விஷ்வாவிற்கு பிடித்திருந்தது.

இருவரும் லஞ்ச் முடித்து வெளியே வந்தனர். "நீங்க தப்பா நெனக்கலேன்னா நா(ன்) ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் ஜோத்ஸ்னா. விஷ்வா அவளை ஏறிட்டார். "இதுக்கு மேலயும் போய் ஆபீஸா? வாங்களேன்..என் ஃபிளாட்டுக்கு போலாம்" என்றாள். விஷ்வாவிற்கு ஒரு "ஹாஃப்" உள்ளிறக்கியது போல் இருந்தது. "போலாமே.." என்றார் ஈனஸ்வரத்தில். வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறந்தன.

ஜோத்ஸ்னா ஃபிளாட்டில் நுழையும் போது விஷ்வாவிற்கு "ஜுரம்" வந்தது போல் இருந்தது. அங்கங்கே தொங்கும் "ஓவியங்கள்" அவரது இளமையை நினைவு படுத்தின. "பாஸ்..! நான் கொஞ்சம் ட் ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கறேன்.." என்று "எஸ் ஜானகி" குழைவில், ஏறக்குறைய விஷ்வா மேல் படர்ந்து விட்டு ஜோத்ஸ்னா பெட் ரூமிற்குள் சென்றாள்.

விஷ்வாவிற்கு அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. இன்னும் நாம் சும்மா இருந்தால் நமது ஆண்மையே சந்தேகத்துக்குரியதாகிவிடும். உடைகளைக் களைந்து முழு நிர்வாணமாகி பெட் ரூம் கதவைத் தள்ளி நுழைந்தால்..

டேபிள் மேல் "கேக்" வைக்கப் பட்டிருந்தது. "ஹாப்பி பர்த்டே டு யூ" என்று கோரஸாய் நிகிதா, அருண், அகில், ஜோத்ஸ்னா, மற்றும் சில நண்பர்கள் பாடி வரவேற்றனர்!!!

("வலை"யிலிருந்து பின்னப்பட்டது)