Thursday, October 01, 2009

பிறந்த நாள்

விஷ்வா அன்று காலை விழித்துக் கொள்ளும் போது மணி ஏழாகிவிட்டது. மனைவி நிகிதாவை திட்டிக் கொண்டே அரக்கப் பரக்கக் குளித்தார். குளிக்கும் போது சட்டென ஞாபகம் வந்தது "அட! இன்றுதானே எனக்கு பிறந்த நாள்..நிகிதா ஆச்சரியப் பரிசு வைத்திருப்பாள்...அருணும், அகிலாவும் வழக்கம் போல் பூங்கொத்துடன்.." நினைப்பே இனித்தது. இன்றாவது அலுவலகத்திலிருந்து žக்கிரம் வந்து எல்லோரையும் "அன்னலஷ்மி"க்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அவருக்குப் பிடித்த நீல நிறத்தில் உடுத்திக் கொண்டு, டைனிங் ஹாலுக்கு வந்தபோது, காலை டிபன் ரெடியாக இருந்தது. "அட..நமக்குப் பிடித்த வெண் பொங்கல், வெங்காய கொத்ஸ”, காரட் அல்வா.." நிகிதாவை மனதில் பாராட்டினார். "என்னங்க..போட்டுக்க வேண்டியது தானே.." என்று கூறியவாறே நிகிதா பரிமாற ஆரம்பித்தாள். வழக்கம் போல் பிறந்த நாள் பரிசான "நெற்றி முத்தம்" மிஸ்ஸ’ங். அதிர்ச்சியாக இருந்தது. நிகிதாவின் முகத்தைப் பார்த்தார். கோபம் எதுவும் இல்லை.

"ஹாய் டாட்!" என்றார்கள் அருணும், அகிலும். நினைவிற்கு வந்தார். "மா..! காலேஜுக்கு லேட் ஆயிடுத்து..žக்கிரம்.." என்றவாறே தட்டில் தாளம் போட்டனர். "டாட்! கேன் யூ ட் ராப் மீ..?" என்று அகில் கெஞ்சினாள். இவர்களுக்குமா ஞாபகம் இல்லை? மற்றொரு சராசரி தினம் போல் அல்லவா நடந்து கொள்கிறார்கள்?

விஷ்வாவிற்கு காரட் அல்வா கசந்தது. சாப்பிட்டு முடித்து "நிகி! நா(ன்) கௌம்பறேன்" என்றார். "சரி..வழக்கம் போல லேட்தானே?" என்றாள் நிகிதா. "ஆமாம்" என்று உதிர்த்து விட்டு மாருதியை உசுப்பினார்.

வழியில் செல்லும் போது வருத்தமாக உணர்ந்தார். மனசு கனமாக இருந்தது. அலுவலகத்துள் நுழைந்து, லிப்டில் ஏறி, 6வது மாடியில் இருந்த தன் கேபினுக்குள் புகும் போது, அவரது செகரட் ரி ஜோத்ஸ்னா "குட் மார்னிங் பாஸ்! ஹாப்பி பர்த்டே" என்றாள். விஷ்வா தெம்பானார். அட்லீஸ்ட இவளாவது ஞாபகம் வைத்திருக்கிறாளே...!

விஷ்வா அன்றைய அலுவல்களில் ஆழ்ந்ததில் மணி ஒன்றானது தெரியவில்லை. கதவை மெலிதாகத் தட்டிய பின் வந்த ஜோத்ஸ்னா "நீங்கதான் இன்னிக்கு எனக்கு ட் ரீட் கொடுக்கணும்..எங்க போலாம்?" என்றாள். விஷ்வாவிற்கும் சரியெனப் பட்டது. "வா..! "அன்னலஷ்மி" போலாம்" என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றார்.

ஏதேதோ பேசியதில் விஷ்வாவிற்கு நேரம் சென்றதே தெரியவில்லை. அசட்டுத்தனமாய் ஜோத்ஸ்னா மேல் சபலம் தட்டியது. புருஷனை இழந்தவள். இன்றும் அவள் பழகும் முறையில் ஒரு வினோதம் தென்படும். அதுவும் எல்லோரும் அலட்சியப் படுத்திய தன் பிறந்த நாளை அவள் கொண்டாடிய விதம் விஷ்வாவிற்கு பிடித்திருந்தது.

இருவரும் லஞ்ச் முடித்து வெளியே வந்தனர். "நீங்க தப்பா நெனக்கலேன்னா நா(ன்) ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் ஜோத்ஸ்னா. விஷ்வா அவளை ஏறிட்டார். "இதுக்கு மேலயும் போய் ஆபீஸா? வாங்களேன்..என் ஃபிளாட்டுக்கு போலாம்" என்றாள். விஷ்வாவிற்கு ஒரு "ஹாஃப்" உள்ளிறக்கியது போல் இருந்தது. "போலாமே.." என்றார் ஈனஸ்வரத்தில். வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறந்தன.

ஜோத்ஸ்னா ஃபிளாட்டில் நுழையும் போது விஷ்வாவிற்கு "ஜுரம்" வந்தது போல் இருந்தது. அங்கங்கே தொங்கும் "ஓவியங்கள்" அவரது இளமையை நினைவு படுத்தின. "பாஸ்..! நான் கொஞ்சம் ட் ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கறேன்.." என்று "எஸ் ஜானகி" குழைவில், ஏறக்குறைய விஷ்வா மேல் படர்ந்து விட்டு ஜோத்ஸ்னா பெட் ரூமிற்குள் சென்றாள்.

விஷ்வாவிற்கு அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. இன்னும் நாம் சும்மா இருந்தால் நமது ஆண்மையே சந்தேகத்துக்குரியதாகிவிடும். உடைகளைக் களைந்து முழு நிர்வாணமாகி பெட் ரூம் கதவைத் தள்ளி நுழைந்தால்..

டேபிள் மேல் "கேக்" வைக்கப் பட்டிருந்தது. "ஹாப்பி பர்த்டே டு யூ" என்று கோரஸாய் நிகிதா, அருண், அகில், ஜோத்ஸ்னா, மற்றும் சில நண்பர்கள் பாடி வரவேற்றனர்!!!

("வலை"யிலிருந்து பின்னப்பட்டது)

No comments: