Wednesday, February 20, 2013

55 வார்த்தை கதை வரிசை - குருவாயூரப்பா!

‘லாஸ்ட் வீக் புது பென்ஸில் பாக்ஸைத் தொலைச்சிட்டேன்.. ‘குருவாயூரப்பா!’னு சொன்னே. நேத்திகூட சைக்கிளை அஸ்வின் மேலே விட்டதா அவங்க வீட்ல ரிப்போர்ட்...அப்ப கூட ‘குருவாயூரப்பா!’னுதான் கோவத்தோட சொன்னே...ஏம்பா?’ (22)

‘செல்லம்! அப்பா அம்மாக்கு நீ ரொம்ப லேட்டா பொறந்தயா? அதனால எது பண்ணாலும் திட்டமுடியல. ஆனாலும் கோவம் வருதே. அதனால ‘குருவாயூரப்பா!’ சத்தம் போடுறேன்’ (18)

‘இனிமே சமத்தா இருக்க ட்ரை பண்றேன்பா’ (5)

ரெண்டு நாள் கழித்து... (3)

‘குருவாயூரப்பானு ரெண்டு தடவை சொல்லு...!’ (4)

‘???’

’கனடா காமிராவை உடைச்சிட்டேன்பா!’ (3)

No comments: