Wednesday, February 20, 2013

55 வார்த்தை கதை வரிசை - மீசை!


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் கூட்டமில்லை. நானும் அவனும் நிதானமாய்த் தரிசித்தோம். (8)

அவன் அர்ச்சகரைக் கேட்டான். ‘சாமி! பெருமாளுக்கு மீசை சரியா வெக்கலியா?’(8)

‘சரியாத்தானே இருக்கு!’(2)

‘ரைட் ஸைட், லெஃப்டை விட சின்னதாயிருக்கு, பாருங்களேன்’ (6)

’ஆமாம்..அப்பப்ப கரப்பான் தின்னுடறது’ (4)

‘சாமி! பெருமாளுக்கு மீசைதான் அழகு. கொஞ்சம் கவனமாயிருங்க!’ (6)

‘தம்பி சொல்றது உண்மைதான். இப்ப சரி பண்ணிர்றேன்’(6)

வெளியில் வந்தோம். ‘அப்புறம் சொல்றேன்னியே! என்னாச்சு அழகு முறுக்கு மீசை?’ (8)

அவன் ‘ட்ரிம் பண்ணும்போது பிசகிருச்சி... வழிச்சிட்டேன்!’ சொல்லிவிட்டுப் புன்னகைத்தான். (7)

No comments: